உள்ளூர் செய்திகள்

கிரானைட் கற்களை கடத்திய லாரி பறிமுதல்

Published On 2023-06-18 15:02 IST   |   Update On 2023-06-18 15:02:00 IST
  • அந்த வழியாக ஒரு லாரிைய மடக்கிபிடித்து விசாரித்ததில் 20 டன் கிரானைட் கற்கள் அனுமதியின்றி கடத்தியதாக தெரியவந்தது.
  • போலீசார் லாரியின் உரிமையாளர், டிரைவர் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி பொன்னுமணி மற்றும் பர்கூர் போலீசார் அதே பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு லாரிைய மடக்கிபிடித்து விசாரித்ததில் 20 டன் கிரானைட் கற்கள் அனுமதியின்றி கடத்தியதாக தெரியவந்தது.

உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து ரூ.1லட்சத்து20 மதிப்புள்ள கிரானைட் கற்களையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பர்கூர் போலீசார் லாரியின் உரிமையாளர், டிரைவர் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். 

Tags:    

Similar News