கோப்பு படம்
கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல்!
- கொடைக்கானலில் விதிமீறி கட்டப்பட்ட 24 கட்டிடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிப்ப குதிகளில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மதுரை ஐ-கோர்ட்டு கிளை பூட்டி சீல் வைக்க கடந்த 2019ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இணைந்து வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களில் விதி மீறி கட்டப்பட்ட 54 கட்டிடங்களுங்கு பூட்டி சீல் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை நகர்ப்புற வீட்டு வசதி வாரியத்திடம் வீதி மீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் உரிமை யாளர்கள் கட்டிடங்களை திறக்க கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சென்னை நகர்ப்புற வீட்டு வசதி வாரியம் வில்பட்டி ஊராட்சி பகுதிகளில் உள்ள 24 கட்டிடங்களுக்கு மட்டும் மறு சீரமைப்புக்காக 3 மாத காலம் அவகாசம் அளித்து கட்டிடங்களை வரைமுறைப்படுத்திக் கொள்ளும் பணிகள் மேற்கொள்ள கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதியளித்தனர், இதனை தொடர்ந்து 24கட்டிடங்கள் திறக்கப்பட்டது.
இந்நிலையில் 3 மாத காலத்திற்கும் மேலாகியும், தற்போது வரை இந்த கட்டிடங்கள் மாற்றியமைக்கப்படாமல் உள்ளது. மேலும் கட்டிடங்களை வரைமுறை படுத்தியதற்கான சான்றிதழ்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திடம் அளிக்கவில்லை. எனவே மீண்டும் பூட்டி சீல் வைக்க வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
வில்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மீண்டும் பூட்டி சீல் வைக்க வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதல்கட்டமாக இந்த 24 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கி, மின்சார துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கோள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா தகவல் தெரிவித்துள்ளார்.