உள்ளூர் செய்திகள்

சீல் வைக்கப்பட்ட கடையினை படத்தில் காணலாம்.

வடலூரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்

Published On 2022-12-21 14:44 IST   |   Update On 2022-12-21 14:44:00 IST
  • கெல்வின் (வயது37) ‌‌என்பவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
  • ரூ.5,50 00மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செய்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆபத்தாரணபுரம் பகுதியில் கெல்வின் (வயது37) ‌‌என்பவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதனையொட்டி அவர்கடையிலிருந்து ரூ.5,50 00மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செய்தனர். இதே போல் ராகவேந்திரா சிட்டியில் சபியுல்லா பெட்டி க்கடையில் ரூ.1500, மதிப்பிலான, புகையிலை பொரு ட்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர் 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

Tags:    

Similar News