உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு - வழிப்பறி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2023-06-07 08:48 GMT   |   Update On 2023-06-07 08:48 GMT
  • இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து 5 பேர் கொண்ட கும்பல், இதயத்துல்லா உசேனை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர்.
  • இந்நிலையில் காயம் அடைந்த இதயத்துல்லா உசேனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஏரல் சேதுவாய்க்காலை சேர்ந்தவர் இதயத்துல்லா உசேன் (வயது 51).

லாரி டிரைவரான இவர் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே 4-ம் கேட்டு அருகே மீளவிட்டான் சாலையில் உள்ள லாரி செட்டில் இவருடைய லாரியை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து 5 பேர் கொண்ட கும்பல், இதயத்துல்லா உசேனை வழிமறித்து பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால் அந்த கும்பல் இதயத்துல்லா உசேனை அரிவாளால் வெட்டினர்.

தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ. 4 ஆயிரம் பணம், செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்நிலையில் காயம் அடைந்த இதயத்துல்லா உசேனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட அந்த கும்பலை வலைவீசி தேடி வருகிறார்.

Tags:    

Similar News