உள்ளூர் செய்திகள்

கனமழை

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Published On 2022-12-12 13:39 GMT   |   Update On 2022-12-12 13:46 GMT
  • சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
  • ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு:

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதேபோல், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று 3 மணிக்கு மேல் பள்ளிகள் இயங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கனமழை எதிரொலியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News