உள்ளூர் செய்திகள்

பெண் ஒருவருக்கு மாணவன் பொருள் உதவி வழங்கிய காட்சி.

கோவில்பட்டி அருகே மனநல காப்பகத்திற்கு பள்ளி மாணவ- மாணவிகள் பொருள் உதவி

Published On 2023-03-23 14:24 IST   |   Update On 2023-03-23 14:24:00 IST
  • கோவில்பட்டி அருகே உள்ள பெண்கள் மனநல காப்பகத்திற்கு காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிரி.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகள் வந்தனர்.
  • அப்போது மாணவ, மாணவிகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் மனநல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினர்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள முடுக்குமீட்டான்பட்டி ஆக்டிவ் மைன்ட்ஸ் பெண்கள் மனநல காப்பகத்திற்கு காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிரி.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகள் வந்தனர்.

அப்போது மாணவ, மாணவிகள் காப்பகத்தில் தங்கியிருக்கும் மனநல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான உடைகள், பாய், மளிகை சாமான், பிஸ்கட் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினர். இதேபோல் செம்புதூரில் உள்ள ஆக்டிவ் மைண்ட் ஆண்கள் மனநல காப்பகத்திற்கு வந்திருந்து அவர்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கினர். பள்ளி முதல்வர் ஜெயக்குமார், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைந்து காப்பக நிர்வாகி தேன்ராஜா மற்றும் ஊழியர் அந்தோணி ரோசி அவர்களிடம் பொருட்களை வழங்கினர்.

Tags:    

Similar News