உள்ளூர் செய்திகள்

சரியாக படிக்கவில்லை என தாய் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை

Published On 2022-10-18 15:36 IST   |   Update On 2022-10-18 15:36:00 IST
  • மாணவி படப்பை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார்.
  • அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தூக்கில் தொங்கிய சாருமதியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆத்தனஞ்சேரி பெரியார் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி சுமதி. இவர்களுடைய மகள் சாருமதி (வயது 18). இவர் படப்பை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்

நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை தாழிட்டு மின்விசிறியில் புடவையில் தூக்குமாட்டிக் கொண்டு தொங்கியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தூக்கில் தொங்கிய சாருமதியை மீட்டு சிகிச்சைக்காக பழைய பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சாருமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில், மகள் சாருமதி சரியாக படிக்கவில்லை என தாய் சுமதி கண்டித்ததாகவும் இதனால் சாருமதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News