உள்ளூர் செய்திகள்

மல்டி டாஸ்கிங் பணி தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியீடு

Published On 2023-06-30 09:38 GMT   |   Update On 2023-06-30 09:38 GMT
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம்.
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம்.

சேலம்:மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி), மல்டி டாஸ்கிங் (தொழில் நுட்பம் அல்லாத) பணியாளர்கள் மற்றும் ெஹவில்தார் பணிகளுக்கான தேர்வு- 2022 அறிவிப்பு சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து தேர்வு நாடு முழுவதும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில், சேலம், நாமக்கல்லை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் எழுதினர். விண்ணப்பதாரர்கள் எழுதிய விடைத்தாள் மற்றும் கேள்விக்கான அதிகாரபூர்வ விடைகள் தேர்வாணையம் வெளி யிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி விடைத்தாள் மற்றும் கேள்விக்கான பதில் ஆகியவற்றை பார்வை யிடலாம். இந்த வசதி அடுத்த மாதம் 4-ந்தேதி மாலை 5 மணி வரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு காலக்கெடு கிடையாது.

தேர்வாணைய இணையதளத்தில் உள்ள இவற்றின் லிங்க் வசதியை பயன்படுத்தி விண்ணப்ப தாரர்கள் தங்களுக்குரிய பதிலளிப்புத் தாள்களுடன் தற்காலிக விடை குறிப்புகளை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

Tags:    

Similar News