உள்ளூர் செய்திகள்

புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற விழாவில் கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்த சுமங்கலி பெண்கள்.

மக்கள் நல்வாழ்வு பெற கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்த சுமங்கலி பெண்கள்

Published On 2023-08-03 14:50 IST   |   Update On 2023-08-03 14:50:00 IST
  • வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டியும், மக்கள் நல்வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டி பூஜை
  • வரிசையில் வாழப்பாடி புதுப்பாளை யம் கிராமத்தில் ஆடி பவுர்ண மியை யொட்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு பூஜை வழிபாடு

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இன்றளவிலும் முன்னோர் கள் வழியில் மரபு மாறாமல் பல வினோத வழிபாட்டு முறை களை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர்.

வழிபாடு

குறிப்பாக வறட்சி நிலவும் தருணத்தில் காவல் தெய்வங் களுக்கு ஆடு, கோழி, பன்றி பலியிட்டு முப்பூஜை வழி பாடு நடத்து தல், அம்மனுக்கு கூழ் ஊற்று தல், வயதில் மூத்த கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்து வழிபாடு நடத்துதல், கிராமத்தின் எல்லையில் எல்லைச் சாமிக்கு பன்றி பலி கொடுத் தல் போன்ற வினோத வழிபாடுகளை தொடர்ந்து வருகின்றனர்.அந்த வரிசையில் வாழப்பாடி புதுப்பாளை யம் கிராமத்தில் ஆடி பவுர்ண மியை யொட்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

அப்போது வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டியும், மக்கள் நல்வாழ்வுக்கு வழி வகுக்க வேண்டியும், வயதில் மூத்த கைம்பெண் களை வர வழைத்து சுமங்கலி பெண்கள் பாத பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

இந்த நிகழ்ச்சி அப்பகுதி யில் கூடியிருந்த பக்தர் களுடைய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சிறப்பு பூஜை வழி பாட்டினால் இப்பகுதியில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்குமென நம்பிக்கை தொடர்ந்து வருவ தாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News