உள்ளூர் செய்திகள்

மேட்டூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி பலி

Published On 2023-08-03 14:41 IST   |   Update On 2023-08-03 14:41:00 IST
  • ஆற்றில் அடையாளம் தெரியாத 50 வயதுமதிக்க தாக்க நபர் குளித்துக் கொண்டிருந்தார்
  • நீரில் மூழ்கியவரின் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேட்டூர்:

மேட்டூர் 4 ரோடு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத 50 வயதுமதிக்க தாக்க நபர் குளித்துக் கொண்டிருந்தார். ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரின் வேத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் மேட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீனவர்கள் பரிசல் மூலம் சென்று நீரில் மூழ்கியவரின் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் ஜலகண்டாபுரம் அருகே சவூரியூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (50) என்பது தெரியவந்தது.

Tags:    

Similar News