உள்ளூர் செய்திகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சாவு

Published On 2023-02-28 14:36 IST   |   Update On 2023-02-28 14:36:00 IST
  • 70 வயதுமதிக்கத்தக்க வாய் பேச முடியாத மூதாட்டி ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார்.
  • இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

சேலம்:

சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள கேட் அருகில் சுமார் 70 வயதுமதிக்கத்தக்க வாய் பேச முடியாத மூதாட்டி ஒருவர் மயக்க நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வந்து மூதாட்டியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி கடந்த 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இறந்துபோன மூதாட்டி , அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. எனவே, போலீசார் மூதாட்டி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News