உள்ளூர் செய்திகள்

பஸ்சில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2023-10-01 08:09 GMT   |   Update On 2023-10-01 08:09 GMT
  • பார்வதி (வயது 60) சம்பவத்தன்று இவர் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையம் வந்தார்.
  • அங்கு வேலையை முடித்து மீண்டும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார்.

சேலம்:

சேலம் ஒமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி பார்வதி (வயது 60) சம்பவத்தன்று இவர் பஸ்சில் சேலம் பழைய பஸ் நிலையம் வந்தார். அங்கு வேலையை முடித்து மீண்டும் பஸ்சில் ஊருக்கு திரும்பினார். அப்போது கருப்பூர் அருகே சென்றபோது அவரது கழுத்தில் இருந்த 2½ பவுன் செயின் மாயமானது. இதனால் பதறிபோன பார்வதி கருப்பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பார்வதி அருகில் இருந்தவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News