உள்ளூர் செய்திகள்

வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்க சேலம் இரும்பாலை அருகே அமைக்கப்பட்டுள்ள பிளாண்ட்.

சேலம் மாவட்டத்தில் 3.35 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு

Published On 2023-05-23 15:40 IST   |   Update On 2023-05-23 15:40:00 IST
  • நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • சேலம் இரும்பாலையில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம்:

நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் முழுவதும் ரூ.1300 கோடி மதிப்பில் 3.35 லட்சம் வீடு களுக்கும், 158 பெட்ரோல் பங்குகளுக்கும் இயற்கை எரிவாயு வழங்கிடும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சேலம் இரும்பாலையில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சேலம் மாநகரப் பகுதி முழுவதும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வினியோகிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. 450 வீடு களுக்கு இணைப்பு வழங் கப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 50 வீடுக ளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் குழாய் மூலமாக தொடங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஜாகீர் அம்மாபாளையம், திருவாக்கவுண்டனூர் உள்ளிட்ட மற்ற பகுதிக ளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதேபோன்று, இரும்பாலை ஆவின் பெட்ரோல் பங்க்கில் வாக னங்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்பும் பணியும் இன்று தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்தி யன் ஆயில் அதிகாரிகள் டி.எஸ்.நானாவேர், எஸ்.கே.ஷா, சைலேஷ் திவாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News