உள்ளூர் செய்திகள்

சேலத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் செயல்படும் மாநகர நுண்ணறிவு பிரிவு

Published On 2023-06-11 08:47 GMT   |   Update On 2023-06-11 08:47 GMT
  • மாநகர காவல்து றையில் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது.
  • நுண்ணறிவு பிரிவிற்கு விரை வில் இன்ஸ்பெக்டர் நியமிக்க ப்படுவார்களா என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

சேலம்:

சேலம் மாநகர காவல்து றையில் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது.

சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலை யங்களுக்கும் நுண்ணறிவு பிரிவு சார்பில் தலா ஒரு சப்- இன்ஸ்பெக்டர் நியமிக் கப்பட்டு, இவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்க ளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் சம்பவங்களின் உண்மை தன்மை குறித்த தக வல்களை திரட்டி நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லது உதவி கமிஷனர் மூலம் நேரடி யாக போலீஸ் கமிஷனருக்கு தகவல்களை தெரி விப்பார்கள். இந்த நிலையில் சேலம் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக் டராக இருந்த கற்பகம், ஆட்சி மாற்றத்திற்கு பின் மாறுதல் செய்யப் பட்டார். அதை த்தொடர்ந்து இன்று வரை இன்ஸ்பெக்டர் இல்லாமல் இப்பிரிவு செயல்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

நுண்ணறிவு பிரிவிற்கு விரை வில் இன்ஸ்பெக்டர் நியமிக்க ப்படுவார்களா என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

Similar News