உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்
- ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்
மேட்டூர்:
விவசாயிகள் ஆதார் எண் அடிப்படையில் விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் வாங்க மத்திய அரசு ஆண்டுதோறும் 3 தவணையாக ரூ.6000 உதவித்தொகை வழங்குகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான தவணைத் தொகையை பெற பி.எம் கிசான் இணையதளத்தில் ஆதார் தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே தவணை தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே விவசாயிகள் பொது இ-சேவை மையத்தில், கணினி உபகரணத்தில் கைவிரல் ரேகை வைத்து பி.எம். கிசான் இணையதளம் சென்று தங்களுடைய விவரங்களை நிறைவு செய்ய வேண்டும்.
மேலும் இது குறித்து விவரங்களை பெற வட்டார வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராஜகோபால் தெரிவித்து உள்ளார்.