உள்ளூர் செய்திகள்

ஆட்டோ- மொபட் மோதல்; 3 பேர் படுகாயம்

Published On 2023-08-23 09:23 GMT   |   Update On 2023-08-23 09:23 GMT
  • சேலம் செவ்வாய்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன் இவரது பேத்தி மைஸிகாபேரன் சர்வன் ஆகிய 2 பேரும் லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
  • பேரன், பேத்தியை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லோடு ஆட்டோ திடீரென மொபட் மீது மோதியது. இதில் நடராஜன், சிறுமி, சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

அன்னதானப்பட்டி;

சேலம் செவ்வாய்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 56). இவரது பேத்தி மைஸிகா (9), பேரன் சர்வன் (5) ஆகிய 2 பேரும் லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடராஜன் தனது பேரன், பேத்தியை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லோடு ஆட்டோ திடீரென மொபட் மீது மோதியது. இதில் நடராஜன், சிறுமி, சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News