உள்ளூர் செய்திகள்

குட்கா விற்ற பெண் கைது

Published On 2023-11-25 09:49 GMT   |   Update On 2023-11-25 09:49 GMT
  • அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
  • மணியனூர் பாரதி நகரில் மளிகைக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

அன்னதானப்பட்டி:

சேலம் அன்னதானப்பட்டி போலீசார் மணியனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணியனூர் பாரதி நகரில் மளிகைக் கடையில் வைத்து புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மளிகைக் கடையில் புகையிலைப் பொருட்கள் விற்றதாக பரிமளா (40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News