உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் அருகே வசிஷ்ட நதியில் தவறி விழுந்து டெய்லர் பலி

Published On 2023-11-11 13:53 IST   |   Update On 2023-11-11 13:53:00 IST
  • அய்யனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் ஸ்ரீதரன். இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.
  • கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து ஸ்ரீதரன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அய்யனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் ஸ்ரீதரன். இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து ஸ்ரீதரன் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஸ்ரீதரன் வீடு திரும்பாத நிலையில் அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை நரசிங்கபுரம் பகுதியில் இருந்து தென்னங்குடி பாளையம் செல்வதற்காக வசிஷ்ட நதியின் குறுக்கே மேம்பால கட்டுமான பணி நடைபெறும் ஈச்சிலி மரம் அருகே வசிஷ்ட நதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் அளித்த தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் வசிஷ்ட நதியில் மிதந்த உடலை மீட்டனர்.

அப்பகுதி மக்கள் உடலை பார்த்த போது காணாமல் போன ஸ்ரீதரன் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது வசிஷ்ட நதியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.அய்யனார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் ஸ்ரீதரன். இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News