உள்ளூர் செய்திகள்

ஏரிக்கரையில் பனை விதைகளை விதைக்கும் பெண்கள்.

மாசிநாயக்கன்பட்டி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பு

Published On 2023-07-03 08:58 GMT   |   Update On 2023-07-03 08:58 GMT
  • பனம் பழ விதை களை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீர்நிலைகளிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளர்க்கவும், தன்னார் வலர்கள், மாணவ–மாண வியர், இளைஞர்களிடையே சமீபகாலமாக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
  • இயற்கையை நேசி, தாலிப்பனை மரம் வளர்ப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரு கின்றனர்.

வாழப்பாடி:

நிலத்தடி நீர் காக்கும் பனை மரங்களின் பயன்கள் குறித்தும், உதிர்ந்து விழுந்து வீணாகும் பனம் பழ விதை களை சேகரிக்கவும், பதியம் போட்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நீர்நிலை களிலும், தரிசு நிலங்களிலும் நட்டு வளர்க்கவும், தன்னார் வலர்கள், மாணவ–மாண வியர், இளைஞர்களிடையே சமீபகாலமாக விழிப்பு ணர்வு ஏற்பட்டுள்ளது.

சேலம் அருகே அயோத்தி யாப்பட்டணம், மாசிநா யக்கன்பட்டி, உடையாப் பட்டி, பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஒன்றி ணைந்து, இயற்கையை நேசி, தாலிப்பனை மரம் வளர்ப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரு கின்றனர்.

இக்குழுவினர் ஏற்படுத் திய விழிப்புணர்வால், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மாசிநாயக்கன்பட்டி ஏரியில் திரண்ட பள்ளி, கல்லுாரி மாணவ–மாண வியர் மற்றும் தன்னார்வலர் கள், நுாற்றுக்கணக்கான பனை மர விதைகளை சேக ரித்து ஏரிக்கரையில் விதைத்தனர். இக்குழுவின ருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள் ளனர்.

Tags:    

Similar News