உள்ளூர் செய்திகள்

சேலத்தில் 3 மின் வாரிய அலுவலகங்கள் ஒரே இடத்திற்கு மாற்றம்

Published On 2023-06-04 08:19 GMT   |   Update On 2023-06-04 08:19 GMT
  • நாளை (5-ந்தேதி) முதல் கிச்சிபாளைம் பிரிவு அலுவலகம், களரம்பட்டி பிரிவு மற்றும் கிச்சி பாளையம் உபக்கோட்டம் அலுவலகம், ஆகிய 3 அலுவலகங்களும் எருமாபாளையம் பஞ்சாயத்து கிச்சிபாளையம் துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்க உள்ளது.
  • இந்த தகவலை சேலம் நகரம் மின் வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

சேலம்:

சேலம் சன்னியாசி குண்டு மெயின் ரோடு கணபதி நகரில் கிச்சிபா ளையம் பிரிவு மின்வாரிய அலுவலகம், களரம்பட்டி மெயின் ரோடு, வீரவாஞ்சி தெருவில் களரம்பட்டி பிரிவு உதவி பொறியாளார் அலுவலகம் (இயக்கமும், பராமரிப்பும்) மற்றும் திருச்சி மெயின் ரோடு ஜவுளி கடை பஸ் நிறுத்தத்தில் கிச்சிபாளையம் உபக்கோட்ட அலுவலகம் உதவி செயற்பொறியாளர் (இயக்கமும் பராமரிப்பும்) அலுவலகம் இயங்கி வருகிறது.

நாளை (5-ந்தேதி) முதல் கிச்சிபாளைம் பிரிவு அலுவலகம், களரம்பட்டி பிரிவு மற்றும் கிச்சி பாளையம் உபக்கோட்டம் அலுவலகம், ஆகிய 3 அலுவலகங்களும் எருமாபாளையம் பஞ்சாயத்து கிச்சிபாளையம் துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்க உள்ளது.

இந்த தகவலை சேலம் நகரம் மின் வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News