சேலம் கோட்டம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
சேலம்:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தில், சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மமாவட் டங்களிர் டவுன் பஸ், புறநகர் பஸ், மலை பஸ் என சேலம் மண்ட லத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் என மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
தினசரி 9 லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு, 6 லட்சம் மக ளிர் மற்றும் 14 லட்சம் பய ணிகள் பயணம் செய்கின்ற னர். வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார்பில், 17-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பஸ்கள் சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட், பெங்களூரு பஸ் ஸ்டாண்ட், சென்னை கோயம்படு, ஓசூர் பஸ் ஸ்டாண்ட், கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், திருப்பூர் பஸ் ஸ்டாண்ட், திருவண்ணா மலை பஸ் ஸ்டாண்ட், சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்கு வரத்து கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையதளம் மற்றும் ஆப் வழியாகவும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூ ருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூ ருவுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூ ருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இத்தக வலை சேலம் கோட்ட நிர் வாக இயக்குனர் பொன் முடி தெரிவித்துள்ளார்.
மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
வரும் 17-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சேலம் டவுன் பஸ் ஸ்டாண்டில் இருந்து சித்தர் கோவிலுக்கும், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்தும், மேட்டூர் மற்றும் தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரி வித்தனர்.