உள்ளூர் செய்திகள்

சாலையில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

மேச்சேரி பேரூராட்சியில்குப்பைகள்- சாக்கடையை தூர்வாராததால் பொதுமக்கள் அவதி

Published On 2023-07-17 12:38 IST   |   Update On 2023-07-17 12:38:00 IST
  • மேச்சேரி 11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
  • கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது.

மேட்டூர்:

மேச்சேரி 11-வது வார்டு அண்ணா நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும், தேங்கிய கழிவு நீரில் கொசு உற்பத்தியாகி பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

Tags:    

Similar News