உள்ளூர் செய்திகள்

பராமரிப்பு பணிக்காக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தம்

Published On 2023-08-16 12:55 IST   |   Update On 2023-08-16 12:55:00 IST
  • 2 அனல் மின் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
  • இன்று முதல் 45 நாட்களுக்கு 4-வது யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 4 யூனிட்டும், அதன் அருகில் 600 மெகா வாட் கொண்ட ஒரு யூனிட்டும் உள்ளது.

இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி எரிக்கப்பட்டு 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 840 மெகாவாட் கொண்ட அனல் மின் நிலையத்தில் 4-வது யூனிட்டில் வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், இன்று முதல் 45 நாட்களுக்கு 4-வது யூனிட்டில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி முடிந்தவுடன் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News