உள்ளூர் செய்திகள்

ஆன்லைனில் வாலிபரிடம் ரூ.9.33 லட்சம் மோசடி

Published On 2023-11-29 10:06 GMT   |   Update On 2023-11-29 10:06 GMT
  • சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார்.
  • ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார்.

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது இவரது வாட்ஸ் அப்புக்கு கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பகுதி நேர வேலை குறித்து விளம்பரம் வந்தது.

அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்களை டெலிகிராம் மூலம் அந்த வாலிபர் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர் ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார். அதை நம்பிய அவர் மர்மநபர் அனுப்பிய யு.பி.ஐ.-ஐ.டி.க்களில் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 9 லட்சத்து 33 ஆயிரத்து 710 ரூபாயை அனுப்பினார்.

பணம் சென்றடைந்த நிலையில் மர்ம நபர் தொடர்பை துண்டித்து விட்டார். பல முறை முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த வாலிபர் அனுப்பிய வங்கி கணக்கு எண்களை வைத்து பணம் யாரிடம் சென்றுள்ளது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News