உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய காட்சி. அருகில் மாவட்டச் செயலாளர் வெங்கடாஜலம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ உள்ளனர்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில்அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

Published On 2023-10-03 14:58 IST   |   Update On 2023-10-03 14:58:00 IST

    சேலம்:

    சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சூரமங்கலம் பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் 3 ரோட்டில் உள்ள வரலட்சுமி மகாலில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ, பகுதி செயலாளர்கள் பாலு, மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உரிமை

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதில் ஏதோ பொதுச்செயலாளர் என்ற முறையில் நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல. 2 கோடி கட்சி தொண்டர்களின் உணர்வை பிரதிபலிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு.

    இது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் அனைவரின் சம்மதம் இருந்தால் தான் அந்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அதன் அடிப்படையில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறி உள்ளது.

    யார் பிரதமர்? என்று கூறி தேர்தலை சந்திப்பீர்கள்? என சிலர் கேட்கிறார்கள். ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரா மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்தா தேர்தலை சந்திக்கிறார்கள்?. அந்தந்த மாநில உரிமைகளை பாதுகாக்க தேர்தலை சந்திக்கின்றனர்.

    அதேபோல் தமிழக மக்களின் உரிமையை பாதுகாக்க அ.தி.மு.க. போராடுகிறது. நமது உரிமையை பாதுகாக்க பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பா ளர்களுக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வோம்.

    40 இடங்களில் வெற்றி

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை தமிழக மக்கள் நலன் தான் முக்கியம். அவர்கள் தான் எஜமானர்கள். அவர்களின் எண்ணங்களை தான் அ.தி.மு.க. பிரதிபலிக்கிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 இடங் களிலும் அமோக வெற்றிபெறும். இதற்காக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராமல் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும்.

    இவ்வாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    கூட்டத்தில் அவைத் தலைவர் பன்னீர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், பொருளாளர் பங்க் வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பேரவை செயலாளர் சரவணமணி, பகுதி செயலாளர்கள் பாண்டியன், சரவணன், முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டு ராமச்சந்திரன், ஜான் கென்னடி, உமாராஜ், வக்கீல் கனகராஜ், கவுன்சிலர்கள் கே.சி.செல்வராஜ், ஜனார்த்தனன், சசிகலா, சந்திரா கிருபாகரன் மற்றும் வார்டு செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Tags:    

    Similar News