உள்ளூர் செய்திகள்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மேலும் 2 நாட்கள் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published On 2022-10-18 14:33 IST   |   Update On 2022-10-18 14:33:00 IST
  • கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
  • மேலும் 3 நாட்கள் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மேட்டூர், எடப்பாடி ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 8.8. மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எடப்பாடி 7, காடையாம்பட்டி 2.5, சேலம் 1.8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 20.10 மி.மீ. மழை பெய்துள்ளது. இதற்கிடைேய சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (18-ந் தேதி) முதல் வருகிற 20 -ந் தேதி வரை மேலும் 3 நாட்கள் இடி, மின்ன லுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால்பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News