உள்ளூர் செய்திகள்

முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத்.

பா.ஜ.க.வில் சேரப்போவதாக வதந்தி: கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன்- ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.கோபிநாத் பேட்டி

Published On 2022-08-01 09:57 GMT   |   Update On 2022-08-01 09:57 GMT
  • நான் மாற்றுக் கட்சியில் சேரப்போகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.
  • என் கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ்காரனாகத்தான் இருப்பேன்.

ஓசூர்,

ஓசூர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.கோபிநாத், பா.ஜ.கவில் சேரப்போவதாக வதந்தி கிளம்பியதையடுத்து, ஓசூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மூத்த, தீவிர காங்கிரஸ்காரனாகிய நான் மாற்றுக் கட்சியில் சேரப்போகிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரஸ்காரனாகத்தான் இருப்பேன். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

கட்சி தேர்தலில் கிருஷ்ணகிரி மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் எனது ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்த்துள்ளனர்.

ஆனால் அவர்களை மாநில பொதுக்குழு உறுப்பினர், நகர தலைவர், வட்டார தலைவர் போன்ற பதவிகளுக்கு பரிசீலிக்கப்படாதது எனக்கு மன சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

Tags:    

Similar News