உள்ளூர் செய்திகள்

விளாத்திகுளம் அருகே மேள கலைஞருக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பில் உபகரணம்-மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-07-02 08:49 GMT   |   Update On 2023-07-02 08:49 GMT
  • உருமி மேள கலைஞர் பாரதமணியின் குடும்பம் வறுமையில் இருந்து வந்தது.
  • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாரதமணிக்கு புதிய உறுமி வழங்கப்பட்டது.

 விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தை சேர்ந்த உருமி மேள கலைஞர் பாரதமணி. இவரது குடும்பம் வறுமையில் இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உருமி வாங்குவதற்கு போதிய பொருளாதார வசதியின்றி இல்லை என்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு ஒன்றை பாரதமணி கொடுத்தார். இந்நிலையில் மனு கொடுத்த 2 நாட்களில் இது குறித்து நடிவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உருமி மேள கலைஞர் பாரதமணிக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சொந்த நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய உறுமியை வழங்கினார்.

அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பாலமுருகன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News