உள்ளூர் செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.58 லட்சம் மதிப்பில் வண்டிகள்

Published On 2022-07-04 07:51 GMT   |   Update On 2022-07-04 07:51 GMT
  • சாலையோர வியாபாரிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறி வண்டி, ஏழு உணவு வகை வண்டிகள் வழங்க பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
  • நகராட்சிக்கு முன்புள்ள உப்பு குளம் தூர்வாரும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் துணைத் தலைவர் மங்களநாயகி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர்ராமையன் உள்ளிட்ட நகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகராட்சி பகுதியில் தீsன்தயாள் அந்தியோதயா போஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதார முகமை நகர்ப்புற திட்ட த்தில் 31 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் பழங்கள் மற்றும் காய்கறி வண்டி, ஏழு உணவு வகை வண்டிகள், 14 பூ விற்பனை வண்டிகள் வழங்க பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 45 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சிக்கு எதிரே அமைந்துள்ள உப்பு குளம் நீர்நிலை மேம்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

பின்பு நகரமன்ற தலைவர் புகழேந்தி ்நகராட்சிக்கு முன்பு உள்ள உப்பு குளம் தூர்வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணியில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்றும், சாலையோர வியாபாரிகள் 31 பேருக்கு விரைவில் வண்டிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News