உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

வீட்டின் மேற்கூரை விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2022-07-25 00:21 IST   |   Update On 2022-07-25 00:21:00 IST
  • வீட்டின் மேற்கூரை இடிந்து சிவசங்கரி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
  • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கல்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தீர்த்தனகிரி மதுரா T. கள்ளயங்குப்பம் கிராமம், பொட்ட கரைமேடு காலனியைச் சேர்ந்த ஜெயசங்கர் என்பவரின் மனைவி திருமதி.சிவசங்கரி (வயது 33) நேற்று முன்தினம் (23.07.22) பிற்பகல் வீட்டில் உறங்கிக் கொண்டிந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் அடிப்பகுதி அவர் மீது இடிந்து விழுந்ததில்  சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News