உள்ளூர் செய்திகள்
ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா
- திருப்பள்ளி முக்கூடல் கிராம பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது.
- சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிமாறன் கலந்து கொண்டு சிறப்பித்தார்
திருவாருர்:
திருவாரூரில் விஜயபுரம் ரோட்டரி சங்கத்தின் இரண்டாம் ஆண்டும், 2022-23-ம் ஆண்டின் பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் தலைவராக அபி பேரீச்சை சுப்பிரமணியன், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக வீரக்குமார் ஆகியோர் பணி ஏற்றனர். விழாவில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பள்ளி முக்கூடல் கிராம பள்ளிக்கு தண்ணீர் சுத்திகரிப்பான் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் என். மணிமாறன் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழாவில் விஜயபுரம் ரோட்டரி பயிற்றுனர் அண்ணாதுரை, பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.