ஆழ்வார்திருநகரியில் ரூ.186 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி
- ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.
- இத்திட்டத்தின் தொடக்க விழா ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலையை சீரமைத்து புதுப்பிக்கும் பணிக்காக ரூ.186 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.
இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தார்சாலை புதுப்பிக்கும் பணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், ஆழ்வார்திருநகரி காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்டராமன், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, துணைத்தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துராமலிங்கம், தி.மு.க. பிரதிநிதி ஸ்ரீதர், ஆதி உடையார், மாரியப்பன், ரஞ்சித் மோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் விஜய் சுரேஷ், உதவி பொறியாளர் சிபின், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர்கள் எடிசன், மாவட்ட இளைஞரணி ஜெயசீலன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கருணாகரன், ஊடகப்பிரிவு மரியராஜ், நகர பொறுப்பாளர் அபுதாகிர், வட்டாரச் செயலாளர் சிவசக்தி வேல், வட்டாரச் செயலாளர் சேகர், வட்டார பொருளாளர் விஜயன், நகர துணைத் தலைவர் ஆஸ்கின், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் குமார், வட்டாரச் செயலாளர் மோகன்ராஜ், இளைஞர் காங்கிரஸ் வட்டார செயலாளர் ரெங்கராஜன், பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், கேம்பலாபாத் கிராம கமிட்டி தலைவர் அஜிமுல்லா, ஒப்பந்ததாரர்கள் மாடசாமி, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.