உள்ளூர் செய்திகள்

சாலை விரிவாக்க பணி: அதிகாரி நேரில் ஆய்வு

Published On 2023-01-25 15:05 IST   |   Update On 2023-01-25 15:05:00 IST
  • நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஓசூர்,

ஓசூர் வட்டம், ஒசூர் முதல் குடிசாதனப்பள்ளி வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளை கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நெடுஞ்சாலைத்துறை ஒசூர் உட்கோட்டத்தில் ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் குடிசாதனப்பள்ளி வரை ஓசூர், நெடுஞ்சாலைத்துறை, உட்கோட்டம் மூலமாக இருவழிச்சாசலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சாலை விரிவாக்கப்பணிகளை கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தரமான முறையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் பாகலூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் இணைப்பு கம்பிகள் சீரமைக்கும் பணிகள் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ஓசூர் நெடுஞ்சாலைத்துறை உதவி க்கோட்டப்பொறியாளர் செந்தில்குமரன், உதவிப்பொறியாளர் வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News