உள்ளூர் செய்திகள்

கிடப்பில் போடப்பட்ட பாலம் கட்டும் பணி.

ஆண்டிபட்டி அருகே பாலம் கட்டும் பணி தாமதத்தால் விபத்து அபாயம்

Published On 2023-09-13 06:07 GMT   |   Update On 2023-09-13 06:07 GMT
  • பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
  • பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி ஊராட்சி சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் பாலம் கட்டுவதற்கு நடு ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித பணியும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாலம் கட்டுவதற்கு ரூ.7.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுவரை இந்த பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் இரவு நேரங்களில் பொதுமக்கள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாலம் கட்டும் பணியை விரைவில் தொடங்க வேண்டுமென சென்னமநாயக்கன்பட்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News