ரிக் வண்டி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
- ரிக் வண்டியில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு மீனா என்ற மனைவியும், கோபி ,ரோகித் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
- இந்நிலையில் ரிக் வண்டியில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்த பாஸ்கரன் வீட்டில் இருக்கும் போது தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டன்பட்டி அருகே மாரப்ப நாயக்கன்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகன் பாஸ்கரன்(38).
இவர் ரிக் வண்டியில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு மீனா என்ற மனைவியும், கோபி ,ரோகித் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில் ரிக் வண்டியில் வேலை செய்துவிட்டு வீட்டுக்கு வந்த பாஸ்கரன் வீட்டில் இருக்கும் போது தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். அப்போது மனைவி தட்டி கேட்டுள்ளார். அதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு மீனா தனது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு கணக்கம்பாளையத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார் .இதனால் விரக்தியில் இருந்த பாஸ்கரன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வேல கவுண்டன்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.