உள்ளூர் செய்திகள்

சமூக அநீதிகளை எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு புரட்சி வணக்கம்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-12-06 13:35 IST   |   Update On 2024-12-06 13:35:00 IST
  • புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்.
  • தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

"கற்பி-புரட்சி செய்-ஒன்றுசேர்" பெரும்பாலான மக்களின் உரிமைகளையும்-கண்ணியத்தையும் மறுத்த, இந்தச் சமுதாயத்தில் வேரூன்றிய சமூக அநீதிகளுக்கு எதிராக நம்மிலிருந்து உருவாகி எதிர்த்த புரட்சியாளர் அம்பேத்கருக்குப் புரட்சி வணக்கம்.

கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை சமைத்தவர் அவர்.

தனது சிந்தனைகளால் நமக்கு உரமூட்டி-நம்மைப் பாதுகாக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் நம்முடைய வாளாகவும் கேடயமாகவும் என்றென்றும் வாழ்கிறார். அண்ணலின் அறிவொளியில் சமத்துவச் சமுதாயத்துக்கான பாதையில் நடைபோடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News