உள்ளூர் செய்திகள்

ஆய்வு கூட்டம் நடந்தது.

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

Published On 2023-07-09 15:17 IST   |   Update On 2023-07-09 15:17:00 IST
  • நாகையில் புதிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்வது.
  • சில்லடி கடற்கரையை மேம்படுத்துவது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் அறிவிக்க ப்பட்டுள்ள திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் முன்னிலையில் நடைபெற்றது.

நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம், நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை புதிய கட்டடம், சாமந்தான் பேட்டை மீன்பிடி துறைமுகம், பட்டினச்சேரி கடல் அரிப்பு தடுப்புச் சுவர், நாகையில் பணிபுரியும் மகளிர்க்கு அரசு தங்கும் விடுதி, நாகூர் நெய்தல் பூங்கா, நாகை புதிய கடற்கரையை நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்படுத்துவது, நாகூர் துணை மின் நிலையம், நம்பியார் நகர் புயல் பாதுகாப்பு மையம், நாகை வருவாய் அலுவலகம் பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு ஆகிய திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாகையில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு, சில்லடி கற்கரையை மேம்படுத்துவது, தமிழ்நாடு ஹோட்டல் புதிய கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News