உள்ளூர் செய்திகள்

நல்லம்பள்ளியில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2023-08-31 15:18 IST   |   Update On 2023-08-31 15:18:00 IST
  • வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொப்பூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீதிமன்ற ஆணைப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிய தாசில்தார் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்தும், பணியிடை நீக்கம் செய்ததை நீக்கி மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பணியை புறக்கணித்து காத்திருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் வட்ட தலைவர் கண்ணதாசன், பொருளாளர் சீனிவாச ஆழ்வார் செயலாளர் ராஜா மற்றும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News