மூங்கில்துறைப்பட்டு அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பஸ் டிரைவர் உடல் மீட்பு
- முருகன் என்பவர் அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
- தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடிகளில் சிக்கி இருந்த முருகனின் உடலை மூங்கில்துறைப்பட்டு போலீ–சார் மீட்டனர்.
கள்ளக்குறிச்சி:
திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப் பட்டு பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் மகன் முருகன் (45). அரசு பஸ் டிரைவர். இவர் அகரம்பள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் இறங்கியபோது எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதையறிந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தென்பெண்ணை ஆற்றில் இறங்கி முருகனை தேடி னார்கள். ஆனால் அவரை காணவில்லை. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முருகனின் நிலை என்ன? அவா் என்ன ஆனார்? என்று தெரியா மல் வாணாபுரம் மற்றும் மணலூர்பேட்டை போலீ சாரும், தீயணைப்புதுறை யினரும் முருகனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மூங்கில் துறைபட்டை அடுத்த சுத்த–மலை தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள செடிகளில் சிக்கி இருந்த முருகனின் உடலை மூங்கில்துறைப்பட்டு போலீ–சார் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.