உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட மானை படத்தில் காணலாம்.


விளாத்திகுளம் அருகே உயிருக்கு போராடிய மான் மீட்பு- வனத்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபர்கள்

Published On 2022-11-22 10:01 GMT   |   Update On 2022-11-22 10:01 GMT
  • குருவார்பட்டி கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது.
  • 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி கிராமத்தில் ராமர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் நடுப்பகுதியில் கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே நாய் குரைத்துள்ளது.

இதனை கண்ட அந்த கிராம இளைஞர்கள் சந்தேகத்துடன் வந்து பார்த்தவுடன் 2 வயதான மான் ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்தது.

இந்த நிலையில் குருவார்பட்டி மற்றும் கோடாங்கிபட்டி இளைஞர்கள் சேர்ந்து கயிறு மூலம் மானை மீட்டு ஆட்டோ மூலம் விளாத்திகுளம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் குருமலை காப்பு காட்டில் மானை விட்டனர்.

Tags:    

Similar News