உள்ளூர் செய்திகள்

சின்னசேலத்தில் கிணற்றில் தவறி விழுந்த கன்றுக்குட்டி மீட்பு

Published On 2023-04-06 05:46 GMT   |   Update On 2023-04-06 05:46 GMT
  • மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது
  • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த மணிமேகலை என்பவருக்கு சொந்தமான கன்று குட்டி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்தது. பின்னர் இது பற்றி சின்னசேலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கன்று குட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அஜித் என்ற தீயணைப்பு வீரர் கிணற்றில் கயிறு கட்டி இறக்கினர்.அப்பொழுது 2 பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு 2 பாம்பை உயிருடன் பிடித்து சாக்கு பையில் போட்டு பாதுகாப்பாக கட்டினர்.பிறகு கிணற்றுக்குள் இறங்கி கன்று குட்டியை உயிருடன் மீட்டனர். இந்த மீட்பு போராட்டத்தில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி கன்றுகுட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். சாக்கு பையில் இருந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News