உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தென்னை நல வாரியம் அமைக்க கோரிக்கை

Published On 2022-06-12 08:22 GMT   |   Update On 2022-06-12 08:22 GMT
  • தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தென்னை நல வாரியம் மீண்டும் அமைக்க வேண்டும்.
  • மதிப்பு கூட்டிய தென்னை பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.

திருப்பூர்:

தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில், முந்தைய தி.மு.க., ஆட்சியின்போது தென்னை நல வாரியம் அமைக்கப்பட்டது. தற்போது ரேஷன் கடைகளில் பாமாயில் விற்பனையாகிறது.அதற்கு பதிலாக தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்.

தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தென்னை நல வாரியம் மீண்டும் அமைக்க வேண்டும். காங்கயம் தென்னை வர்த்தக நகராக உள்ளது. தென்னைக்கு இங்கு நிரந்தர கண்காட்சி மையம் அமைக்க வேண்டும். மதிப்பு கூட்டிய தென்னை பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையில் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News