உள்ளூர் செய்திகள்

சுகாதார பேரவை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

கூடுதல் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

Published On 2023-03-10 09:32 GMT   |   Update On 2023-03-10 09:32 GMT
  • அரசு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையம், கடந்த 2016–-ம் ஆண்டு ஏப்ரல் 1–-ந்தேதி அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டது.
  • இந்த மருத்துவமனையில், வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த நுாற்றுக்க ணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

வாழப்பாடி:

வாழப்பாடி சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் இயங்கி வந்த அரசு மேம்ப டுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையம், கடந்த 2016–-ம் ஆண்டு ஏப்ரல் 1–-ந்தேதி அரசு மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த மருத்துவமனையில், வாழப்பாடி பேரூராட்சி மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சேர்ந்த நுாற்றுக்க ணக்கானோர் தினந்தோறும் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

இதை 150 படுக்கை கொண்ட மருத்துவமனை யாக தரம் உயர்த்தி, மகப்பேறு, எழும்பு முறிவு, பொது மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுநர்கள், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ பணி யாளர்கள், இரவு காவலர் மற்றும் துாய்மை பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

வாழப்பாடி ஒன்றியத்தில் மக்கள் தொகை 1.30 லட்ச மாக உயர்ந்துள்ள நிலையில், சிங்கிபுரம் மற்றும் புழு திக்குட்டை ஆகிய இரு இடங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சேலத்தில் கலெக்டர் கார்மேகம் தலை மையில் நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவை கூட்டத்தில், மக்கள் பிரதி நிதிகள் மற்றும் தன்னார்வ இயக்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறை வேற்றிக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக, மாவட்ட மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை உயர் அலுவலர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News