உள்ளூர் செய்திகள்

குன்னூர் ரெயில் நிலையம் ரூ.7 கோடியில் புனரமைப்பு - ரெயில்வே பொதுமேலாளர் பேட்டி

Published On 2023-06-30 14:35 IST   |   Update On 2023-06-30 14:35:00 IST
  • அப்சன் பாரத் என்ற திட்டத்தின் கீழ் குன்னூர் ெரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
  • ஊட்டி ெரயில் நிலையம் ரூ.8 கோடி மதிப்பில், மேட்டுப்பாளையம் ெரயில் நிலையம் ரூ.7½ கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்

குன்னூர்,

நூற்றாண்டு பழமை மிக்க யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ெரயிலில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த மலை ெரயிலில் விரும்பி பயணம் செய்கின்றனர்.

குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய மலை ெரயில் பாதையில் அழகிய பசுமை மிக்க மலைகளும், வானுயர்ந்த மரங்களும், அழகிய பறவைகளும், கண் கவரும் நீரோடைகளும், வனவிலங்குகளும் அழகிய சமவெளி பகுதி காட்சிகளையும் காண முடியும்.

இதனை ரசிப்பதற்காக அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இந்த மலை ெரயிலில் பயணம் செய்கின்றனர். தற்போது மத்திய அரசு அப்சன் பாரத் என்ற திட்டத்தின் கீழ் குன்னூர் ெரயில் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை தென்னிந்திய ெரயில்வே பொது மேலாளர் ஆர். என்.சிங் ெரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குன்னூர் ெரயில் நிலையம் நூற்றாண்டு பழமை மிக்க யுனெஸ்கோ அந்தஸ்து பெற்றது. இந்த ெரயில் நிலையம் மத்திய அரசின் அப்சன் பாரத் என்ற திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

சுற்றுலா பயணிகள் வசதிக்காக வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை, கால்வாய்கள், வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகள், கட்டிடங்கள், பூங்காக்கள் புதுப்பொலிவு பெறச் செய்யப்பட உள்ளது. பணிகள் முழுமையாக ஆறு மாத காலத்தில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல் ஊட்டி ெரயில் நிலையம் ரூ.8 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும். அது போல் மேட்டுப்பாளையம் ெரயில் நிலையம் ரூ.7½ கோடி மதிப்பில் புனரமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News