உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட இடத்தில் விளம்பர பதாகை வைத்த போலீசார்.

பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

Published On 2023-10-20 09:00 GMT   |   Update On 2023-10-20 09:00 GMT
  • ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,664 சதுர அடி நிலத்தை மீட்டனர்.
  • அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பந்தநல்லூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த பந்தநல்லூரில் பசுபதீஸ்வ ரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் பந்தநல்லூர் பிரதான சாலையில் உள்ளது. இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருந்தார்.

மேலும். இந்த கட்டிடத்திற்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தவில்லை என பசுபதீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், மயிலாடு துறை அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை க்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இந்து சமபய அறநிலையத்துறை உதவி ஆணையர் உமாதேவி தலைமையில், துணை ஆணையர் சாந்தா, கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ், அறநிலையதுறை ஆய்வாளர் கோகிலா தேவி மற்றும் அலுவலர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,664 சதுர அடி நிலத்தை மீட்டனர்.

மேலும், அந்த இடத்தில் விளம்பர பதாகைகளையும் அமைத்தனர். இதைத் தொடர்ந்து, எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அங்கு பந்தநல்லூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Tags:    

Similar News