உள்ளூர் செய்திகள்

வட மாநில தொழிலாளி கழிவறையில் பிணமாக மீட்பு

Published On 2023-02-03 09:58 GMT   |   Update On 2023-02-03 09:58 GMT
  • சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் வட மாநில தொழிலாளி தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
  • அப்போது கழிவறையில் இருந்து திடீரென அவரின் அலறல் சத்தம் கேட்டது. கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு மயங்கி கிடந்தார்.

சேலம்:

ஒடிசா மாநிலம் ஜெரபேடா அடுத்த கஞ்சிரா பகுதியைச் சேர்ந்தவர் சரோஜ்குமார் பேரா (வயது 38). இவர் தனது நண்பர்களுடன் சேலம் அம்மாபேட்டை ராமநாதபுரம் பகுதியில் தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று மாலை சரோஜ்குமார், தான் தங்கி இருந்த வீட்டு கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறையில் இருந்து திடீரென அவரின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவருடன் தங்கியிருந்த நண்பர்கள், கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு சரோஜ்குமார் மயங்கி கிடந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சரோஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகார் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சரோஜ்குமாருக்கு ஊர்வசி என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News