உள்ளூர் செய்திகள்

எலிகள் அட்டகாசத்தால் கிருஷ்ணகிரி ஓட்டல் சீல் வைப்பு

Published On 2022-07-17 14:02 IST   |   Update On 2022-07-17 14:02:00 IST
  • உணவுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அருகில் எலிகள் சுற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
  • இதே போல நகரில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் சோதனை செய்யப்பட்டது.‘

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் ஒரு ஓட்டல் சுகாதாரமற்ற முறையில் இருந்தது.

மேலும் உணவுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அருகில் எலிகள் சுற்றிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்வெங்கடேசன் தலைமையிலான அதிகாரிகள் கிருஷ்ணகிரி நகரில் உள்ள, ஓட்டல்களில் நேற்று சோதனை நடத்தினார்கள்.

இதில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஓட்டலில் சமையல் அறை, அடிப்படை வசதிகளை செய்து உணவு பாதுகாப்பு துறையிடம் சான்றிதழ் பெற்ற பிறகு ஓட்டலை திறக்க வேண்டும் என உத்தரவிட்டு ஓட்டலை மூடினார்கள்.

இதே போல நகரில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் சோதனை செய்யப்பட்டது.'

பிளாஸ்டிக் கவர்கள் வினியோகிக்க கூடாது என அறிவுறுத்திய அதிகாரிகள், தொடர்ந்து அனைத்து ஓட்டல்களிலும் சோதனை நடத்தப்படும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும், சுகாதார சீர்கேடுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News