உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Published On 2023-03-06 14:51 IST   |   Update On 2023-03-06 14:51:00 IST
  • மூட்டையில் 50 கிலோ எடை கொண்ட 5 பைகளில் மொத்தம் 250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
  • அவரிடம் இருந்து 250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மொபட் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் மத்திகிரி - ஆனேக்கல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒருவர் வந்தார். போலீசார் அவரை நிறுத்தி சேதனை செய்த போது அவர் வைத்திருந்த மூட்டையில் 50 கிலோ எடை கொண்ட 5 பைகளில் மொத்தம் 250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அந்த அரிசியை மத்திகிரி, குருப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாங்கி கர்நாடகாவில் விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக ஓசூர் மத்திகிரி குருப்பட்டியை சேர்ந்த ஜீலன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மொபட் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News