கூட்டத்தில் பொதுச்செயலாளர் சேதுராமன் பேசியபோது எடுத்த படம்.
ராசிபுரம் ஒன்றிய பா.ஜ.க செயற்குழு கூட்டம்
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய பா.ஜ.க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது.
- கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றிய பா.ஜ.க செயற்குழு கூட்டம் ராசிபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். ராசிபுரம் ஒன்றிய பொது செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் சத்திய
மூர்த்தி, மாவட்ட பொதுச்செ யலாளர் சேதுராமன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில துணைத் தலைவர் லோகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்ரா, ஒன்றிய பார்வையாளர் தமிழரசு, முன்னாள் ஒன்றிய தலைவர்கள் லட்சுமணன், மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் நன்றி தெரிவிப்பது, ஜார்கண்ட் மாநில கவர்னராக ராதா
கிருஷ்ணனை அறிவித்த பிரதமர் மோடி, கட்சித் தலைவர் நட்டா ஆகியோ ருக்கு நன்றி தெரிவிப்பது, ராசிபுரம் பத்திரப்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொது மக்கள்
கழிப்பிட வசதி இல்லாத தால் சிரமத்துக்கு ஆளாகி யுள்ளார்கள்.
ஆகவே உடனடியாக கழிப்பிட வசதி ஏற்ப டுத்திக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்வது, வேலம்பா
ளையத்தில் சமுதாயக்கூடம் கட்டி 2 வருடங்கள் ஆகியும்
மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்பட வில்லை. எனவே சமுதா
யக்கூடத்தை உடனடியாக திறக்க வேண்டும். பிள்ளா நல்லூர் பேரூராட்சியில் இருந்து கல்யாணி வழியாக செல்லும் கால்வாயை உடனடியாக தூர்வார வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.