- தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால் விரக்தி
- போலீஸ் விசாரித்ததால் மனஉளைச்சலுக்கு ஆளானார்.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் சத்யாநகா் பகுதியை சோ்ந்தவா் ஜெயகுமாா் (38) இவா் சோளிங்கரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பனியாளா்களை ஏற்றிசெல்லும் பஸ்சை ஒப்பந்த முறையில் எடுத்து நடத்தி வந்தார்.
இவருக்கும் பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சோ்ந்த தீபாவிற்கும் கடந்த 5-ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4-வயதில் தனுஷ்கா என்ற மகளும் ஒன்றரை வயதில் ராகேஷ் என்ற மகனும் உள்ளனா்.
2-வது பிரசவத்திற்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் உள்ள தாய்வீட்டிற்கு சென்ற தீபா இதுவரை கணவா் வீட்டிற்கு திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கடந்த ஜீன் மாதம் 8 -ம் தேதி ஜெயகுமார் பெங்களூா் கிருஷ்ணராஜபுரம் சென்றார்.
இந்நிலையில் மனைவி தீபா மற்றும் அவரது குடும்பத்தினா் அவர் மீது கிருஷ்ணராஜபுரம் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் போலீசார் ஜெயகுமாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜெயகுமார் நேற்று நள்ளிரவு இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது படுக்கைஅறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து பாணாவரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனா்.